கோவை அருகே சோகம்.! மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த கணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனா பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன் (43). இவருடைய மனைவி மாதவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

அப்பொழுது மனைவியிடம் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டியும் வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் மனைவியை மிரட்டுவதற்காக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறி மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதில் உடல் முழுவதும் தீபரவியதால் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The husband who set himself on fire died in kovai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->