பல்லடம் அருகே சோகம்.! கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பல்லடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் (55). இவர் நேற்று தனது தோட்டத்து கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கட்டி கிணற்றில் உள்ளே இறங்கி தங்கராஜின் உடலை மீட்டனர்.

இதையடுத்து போலீசார் தங்கராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The farmer fell into the well and died in palladam near


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->