மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய  மாவட்ட ஆட்சியர்!  - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 188 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/-த்திற்கான வைப்புத்தொகை பத்திரத்தினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 7 பயனாளிகளுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையினையும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பதிவு பெற்ற 1 உறுப்பினரின் மகனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.4,000/-த்திற்கான காசோலையினையும், நீலகிரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட நன்கொடைகள் அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 1:2 என்ற விகிதத்தில் வழங்கப்படும் இணை மானியத்தொகை ஆகிய ஒருங்கிணைந்த தொகையிலிருந்து 3 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000/-வீதம் காசோலையினையும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.10,000/-த்திற்கான காசோலையினையும் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.3.24 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதனைதொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1,98,240/-த்திற்கான காசோலையினை இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்)துறையின் சார்பாக மரு.பூர்ணஜித் அவர்களிடம் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திரு.பழனிச்சாமி (நிலம்), கண்ணன் (கணக்குகள்), சமூக பாதுகாப்புத் திட்டம் (தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுரேஷ்கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர்  பிரவீணாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The district collector who provided welfare scheme assistance at the peoples grievance redressal meeting


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->