இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கும் இளம்பெண்களை மயக்கி பலாத்காரம் செய்த நடன இயக்குனர்! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக் கோடு கூடரஞ்சி சந்தை அருகே உள்ள பாலகன்னி பகுதியை சேர்ந்த 27 வயதான வாலிபர் பஹிதி. இவர் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருப்பது மட்டுமல்லாமல் மாடலிங் துறையில் நடன இயக்குனராக உள்ளார்.

மாடலிங் துறையில் நடன இயக்குனராக இருப்பதால் அவருடன் ஏராளமான இளம்பெண்களும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்திருக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பஹிதி, இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் அந்த பெண்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவரது ஆசை வலையில் ஏராளமான இளம்பெண்கள் சிக்கி ஏமாந்துள்ளதாக தெரிகிறது.அவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியக்கூடிய ஐ.டி. ஊழியர், பஹிதி மீது போலீசில் புகார் அளித்ததன்  பேரில் போலீசார் விசாரித்த போது பஹிதி பல இளம்பெண்கள் மட்டும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்து ,எத்தனை பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார்? எத்தனை பேரிடம் நகை-பணத்தை அபகரித்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The dance director who hypnotized and raped young women drowned in Instagram


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->