காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன்.! ஈரோடு அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் காதலியை சரமாரியாக கத்தியால் காதலன் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன். இவரது மகன் மெக்கானிக் சந்தோஷ்(32). இவரும், தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக வேலை பார்த்துவரும் 28 வயதுடைய பெண்ணும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் நேற்று தனது நண்பர் காப்பர் காந்தன் (38) என்பவருடன் சென்று அந்தப் பெண் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சந்தோஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து சந்தோஷம் மற்றும் அவரது நண்பர் காப்பர் காந்தனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boyfriend stabbed his girlfriend with a knife in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->