காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது..!
The boy was shot during a guard shooting training
காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை அதிலுள்ள பல காவலர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து.தலையில் குண்டு பாய்ந்ததால் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தலையில் குண்டு பாய்ந்த புகழேந்திக்கு தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The boy was shot during a guard shooting training