காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது..! - Seithipunal
Seithipunal


காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை அதிலுள்ள பல காவலர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து.தலையில் குண்டு பாய்ந்ததால் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தலையில் குண்டு பாய்ந்த புகழேந்திக்கு தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boy was shot during a guard shooting training


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->