அரசு பள்ளியில் ஆட்டோ ஓட்டுனரின் உடல்..ஆண்டிபட்டியில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனரின் உடல் நிர்வாணமான நிலையில் மீட்க பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது-


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சுமார் 40வயது மதிக்கதக்க ஆட்டோ ஓட்டுனர் தங்கமலை. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலையில்நேற்று காலை தெப்பம்பட்டி   அரசு மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் ஆட்டோ டிரைவர் உடலில் பலத்த காயங்களுடன் உடல் நிர்வாணமான நிலையில் கிடந்தது.

தெப்பம்பட்டி  பாலகோம்பை செல்லும்  சாலையில் உள்ள அரசு  மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த நிலையில் உடல்  கிடந்தது.

 இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி  துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் , போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,

 மோப்பநாய் பைரவா மற்றும் தடயவியல் நிபுணர் குழுவினருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேகபிரியா நேரில் வந்து,ஆட்டோ ஓட்டுனரின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனரின் உடல் அரசு பள்ளி வளாகத்தில் கிடப்பதால் தற்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The body of the auto driver in the government school commotion in Andipatti


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->