தஞ்சை: புடவையில் பறிபோன இரு உயிர்!காதல் மனைவியுடன் மது பழக்கத்தால் தகராறு! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (34), இவரின் மனைவி மோகனசுந்தரி (27).

இவர்களுக்கு பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்து, தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக, சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம், நெப்புகோவில் பகுதிக்கு மனைவியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். 

பண்டிகை முடிந்து இருவரும் தஞ்சையில் உள்ள வீட்டிற்கு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம், சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட, இரவு இருவரும் தனித்தனியாக தூங்கிய நிலையில், மனவேதனையில் ஆழ்ந்த மோகனசுந்தரி, மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காலை எழுந்த சரத்குமார் மனைவியை பிணமாக தொங்கியதைக் கண்டதும், அதே சேலையால் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகி உள்ளதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur couple suicide alcoholism 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->