தஞ்சையில் பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவர் மீது அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவல்படி, தஞ்சையின் மையப்பகுதியான ஆத்துப்பாலம் பகுதியில் பெட்ரோல் பங்கில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். 

அப்போது பணியில் இருந்த பெண் ஊழியர் பாலசுப்பிரமணியினை வரிசையில் வரும் படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே  ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலசுப்ரமணியம் அந்த பெண் ஊழியரை ஆபாசமான வார்த்தைகளால் தகாத முறையில் திட்டி உள்ளதாக தெரிகிறது.

இதனை எடுத்து அந்த பெண் ஊழியர் தனது உறவினர்களுக்கு இது குறித்து தெரிவித்துள்ளார். இதேபோல் பாலசுப்ரமணியனும் தனது சட்டக் கல்லூரி மாணவனான மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இரண்டு தரப்பும் பெட்ரோல் பங்கிற்கு வந்த நிலையில், இது பாலசுப்ரமணியம் சுப்பிரமணியன் மீது சிலர் தாக்கியதாக தெரிகிறது. 

இதில், பெண் ஊழியரின் உறவினர் தாக்கியதில், பாலசுப்ரமணியனின் மகன் சட்டக் கல்லூரி மாணவர் ஹரிஹரனுக்கு முதுகில் வெட்டுதாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjai Law Student Attacked


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->