சாராய தொழிற்சாலையை உருவாக்கி பெண்களின் தாலியை அறுக்கின்றனர் - தங்கர் பச்சன் பரபரப்பு பேச்சு.!
thangar bachan speech about cashew fruit
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் பாமக சார்பாக தங்கர் பச்சான் போட்டியிட்டார். இந்த நிலையில், தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முந்திரி பழம் குறித்தும் அதில் உள்ள மகத்துவத்தை பற்றியும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆளும் கட்சியையும் சாடி பேசியுள்ளார். அதாவது, முந்திரி பழம் மிகவும் உடலுக்கு நல்லது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதனை உலக நாடுகள் மருந்தாகவும் பானமாவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதனை இங்கு உள்ளவர்கள் தூக்கி எறிகின்றனர். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அறிவே இல்லை.
இதற்கென்று ஒரு ஆலை தொடங்கி நமது பொருளாதாரத்தை உயர்த்தலாம். கட்சியில் அவரவர்களின் தேவைக்கேற்ப சாராய தொழிற்சாலையை உருவாக்கி பெண்களின் தாலியை தான் அறுக்கின்றனர் என்று ஆளும் கட்சியை சுட்டிக்காட்டி பேசினார். கடலூரில் தான் அதிக குடிசைவாழ் பகுதிகள் கொண்ட மாவட்டமாக உள்ளது.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வரலாம். பண்ருட்டி விருதாச்சலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த முந்திரி பழம் அதிக விளைவதாகவும் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளதால் இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வந்தால் பொருளாதார ரீதியில் முன்னேற அதிக வாய்ப்புள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
thangar bachan speech about cashew fruit