ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் ஜெயித்து விட்டனர்.!! அமமுகவை புட்டு, புட்டு வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன்.!!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகிய இரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தோல்வியுற தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தினகரன் குறித்து தங்க தமிழ்ச்செல்வனும், அமமுக நிர்வாகி ஒருவரும் பேசும் ஆடியோ வைரலானது.

இதைத்தொடர்ந்து தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் ஒருவரையொருவர் தனித்தனியே சரமாரியாக விமர்சித்துக்கொண்டனர். தினகரன் அவரை கட்சியிலிருந்து நீக்க போவதாக அறிவித்தார். 

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன், "இபிஎஸ், ஓபிஎஸ் தேர்தல் வியூகத்தில் ஜெயித்து விட்டனர். முடிவுகளை மக்கள் கொடுத்துவிட்டார்கள். அதிமுக தொண்டர்களை வழிநடத்துவதில் இருவருக்கும் ஒற்றுமை உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 

இரண்டு வருடங்களாக அதிமுக அரசுக்கு பல தொல்லைகள் கொடுக்கப்பட்டது. ஆட்சியை கவிழ்க்க பல திட்டங்கள் போடப்பட்டது. அதிமுகவை எதிர்த்து அனைத்து கட்சிகளுமே போராட்டம் நடத்தியது. எத்தனையோ வித்தைகளையும் போட்டு பார்த்தோம்.

ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஆட்சியை கலைக்க எடுத்த முடிவுகள் அனைத்தும் தோல்வியுற்றது. இது எதைக் காட்டுகிறது? இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் ஜெயித்து விட்டனர் என்று தானே அர்த்தம்?" என செய்தியாளரிடம் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanga tamilselvan says about eps ops


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->