தைப்பூச திருவிழா.. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள் ஒன்று தைப்பூசம் திருவிழா. அதன்படி இந்தாண்டு தைப்பூச திருவிழா நாளை முருகன் கோவில்களில் விமரிசியாக கொண்டாடப்பட உள்ளது.

இதனையடுத்து முருகனின் அறுபடை வீடுகளில் விமரிசியாக கொண்டாடப்படும். குறிப்பாக பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை  தரிசனம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு பழனியில் மட்டுமில்லாமல் மற்ற முருகன் கோவில்களிலும் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thaipoosam festival special train service in Arakonam to thiruthani


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->