பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய "ஆசிரியர்"... போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் முத்துச்சேர்வாமடம் பகுதியை சேர்ந்தவர் வில்வேந்திரன் (34). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வில்வேந்திரன், 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து சிறுமி வில்வேந்திரனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வில்வேந்திரன் கர்ப்பத்தை கலைத்து விடு என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் சிறுமி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், மூலிகை மருத்துவம் மூலம் சிறுமியின் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமி இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வில்வேந்தரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher arrested for pregnant a school girl in Ariyalur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->