தமிழகத்தில் டீ மற்றும் காபி விலை உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழ்நாட்டில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, ரூ. 965.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  19 கிலோ எடையுள்ள வணிகப்பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை கடந்த மாதம் 2137.50 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ரூ.268.50 உயர்ந்து, ரூ.  2,406 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உணவுப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு பகுதியில் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.  டீ ரூ.10லிருந்து ரூ.12க்கும், காபி ரூ.15லிருந்து ரூ.18க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tea and Coffee Price Rising in Tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->