ஜில்லுனு ஒரு நியூஸ்... தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.!  - Seithipunal
Seithipunal


தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 01.05. 2024 வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் வறண்ட வானிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகப்பட்ச வெப்பநிலையாக 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28-29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report 29042024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->