தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் .அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 1-ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 1 ஆம் தேதி) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13ஆம் தேதியை வேலை நாட்களாக அறிவித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu today 2 district local holiday


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->