சரக்குக்கு மாலை போட்டு, பூஜை செய்த டாஸ்மாக் ஊழியர்கள்.. கொண்டாட்டத்தில் குடிமகன்ஸ்.!
Tamilnadu Theni Periyakulam TASMAC Ayudha Pooja Celebration
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக மக்களால் சிறப்பிக்கப்பட்டு வந்தது. வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. தொழிற்சாலைகளில் தாங்கள் பயன்படுத்தும் உபகாரணத்திற்கு பூஜை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் மதுபான கடையில் ஊழியர்கள் வாழைமரம் கட்டி மாலை அணிவித்து வழிபட்டு உள்ளனர். மேலும், மதுபானத்திற்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டு இருந்தனர்.
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யவே, இது பெரும் வைரலாகியுள்ளது. இதனைக்கண்ட குடிமகன்கள் பெரும் வியப்பிற்கு உள்ளாகி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu Theni Periyakulam TASMAC Ayudha Pooja Celebration