ஆட்டத்தை தொடங்கிய அமித்ஷா..தமிழக பாஜகவினர் வயிற்றில் புளியை கரைத்த ஃபார்முலா? அதிர்ச்சியில் பாஜக தலைகள்! - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டு முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வேட்பாளர்களில் 80 சதவீதம் பேர் மாவட்ட அளவிலான நிர்வாகிகளிலிருந்தும், 20 சதவீதம் பேர் மாநில நிர்வாகிகளிலிருந்தும் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. யாருடைய சிபாரிசும் இன்றி அமித்ஷாவே இறுதி பட்டியலை முடிவு செய்வார் என்றும் தகவல் தெரிவிக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக பாஜக மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் சென்னை வந்து, இணை பொறுப்பாளர்களான அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோருடன் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பில், மத்திய உளவுத்துறை மற்றும் தேர்தல் வியூகம் அமைக்கும் நிறுவனம் இணைந்து ஆய்வு செய்த 50 முக்கிய தொகுதிகளின் பட்டியலை பாஜக தரப்பு அ.தி.மு.க.விடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில், பாஜக குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கோரியதாகவும், அதற்கு அ.தி.மு.க. தரப்பு 30 தொகுதிகள் அளவுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, எந்தத் தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பான பணிகள் பாஜக தரப்பில் தொடங்கியுள்ளன. இதற்காக தமிழக பாஜகவின் சில மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின் அடிப்படையிலேயே இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகும் என கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் தேர்வில் மக்கள் தொடர்பு வலுவாக உள்ளவர்கள், அடிப்படை மட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றியவர்கள், ஓட்டுச்சாவடி மட்டம் வரை செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., கவர்னர் அல்லது மத்திய அமைச்சர் போன்ற பதவிகளில் இருந்தவர்கள் இந்த முறை வாய்ப்பு பெறுவது கடினம் என கூறப்படுகிறது. குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கும் சீட்டு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகிகளுக்கு 80 சதவீத முன்னுரிமை வழங்கும் இந்த முடிவு, கட்சியில் நீண்ட காலமாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு ஊக்கமாக அமையும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனால் தேர்தல் முடிவில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், இந்த முறை தமிழகத்தில் பாஜக திட்டமிட்ட முறையில் தேர்தலை எதிர்கொள்ள முயற்சி செய்கிறது என்பதே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதே நேரத்தில், அமித்ஷா நேரடியாக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய உள்ளதால், பல பாஜக தலைவர்கள் தங்களுக்கு சீட்டு கிடைக்குமா என்ற குழப்பத்திலும் கலக்கத்திலும் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah started the game is this the formula that made the Tamil Nadu BJP people lose their temper BJP leaders are in shock


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->