#Breaking: மதுபான கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் - நாளொன்றுக்கு 4 மணிநேரம் விற்பனை.!
Tamilnadu Tasmac Wine Shop Time Changed Morning 8 Am to 12 AM 5 May 2021 Announced
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைபரவல் கடுமையான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளையை தினம் முதல் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவகம், தேநீர் கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான கடைகளை எப்போது? திறப்பார்கள் என்று குடிமகன்கள் அறிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். மேலும், மதுபானக்கடைகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், குடிகாரர்கள் முன்னதாகவே மதுபானங்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
மதுபான கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கலாமா? என்ற ஆலோசனை நடந்து வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகள் அனைத்தும் நாளை முதல் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தமிழக டாஸ்மாக் நிர்வாகம் நேரத்தை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 4 மணிநேரம் மட்டுமே மதுபான கடைகள் இயங்கும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Tasmac Wine Shop Time Changed Morning 8 Am to 12 AM 5 May 2021 Announced