தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டிக் தீர்க்க போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu next 3 hours rain in 10 districts
தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
கேரள - கர்நாடகா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu next 3 hours rain in 10 districts