தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயங்காது.? - போக்குவரத்து கழக ஊழியர் சங்கம்.! - Seithipunal
Seithipunal


பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நாளை முதல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊ ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் நாளை உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Bus strike possible to tomorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->