சோகம்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் நிர்வாகி காலமானார்.! - Seithipunal
Seithipunal


நீடமங்கலம், நீலன் கல்வி குழும நிறுவனர் நீலன் (88) வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் சென்னையில் உயிரிழந்து விட்டார். 

விடுதலை பத்திரிகையின் முன்னால் துணை ஆசிரியரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணை தலைவருமாக இருந்தவர் நீலன். 

சென்னை, சைதாப்பேட்டை விநாயகம் பேட்டை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 3.30 மணி வரையும் மாலை 4.30 மணிக்கு மேல் இரவு 10 மணி வரை கூடுவாஞ்சேரி நீலன் பள்ளி வளாகத்தில் இறுதி மரியாதை செலுத்த திருஉடல் வைக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து நாளை காலை 6 மணி முதல் நீலன் சொந்த ஊரான திருவாரூர், நீடமங்கலம் நீலன் பள்ளி வளாகத்தில் திருஉடல் வைக்கப்படும். 

இறுதி ஊர்வலம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இறந்த நீலனுக்கு வசந்தா என்ற மனைவியும் 4 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Congress Committee ex executive passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->