தமிழகம் | 16 வயது சிறுமியை, சிறுவன் கடத்தி சென்ற சம்பவம்.! காவல்நிலையத்தில் தந்தை.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே 16 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது 16 வயது மகள் கடந்த 19-ம் தேதி  மாயமாகி உள்ளார்.

இது குறித்து சேகர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் தனது 16 வயது மகள் கடந்த 19-ம் தேதி  மாயமாகி உள்ளார் என்றும், அவரை பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் தான் கடத்தி சென்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இப்புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மாயமான சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SUNDAKUPPAM 16 YEAR OLD GIRL MISSING


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->