உடன் இருந்த நண்பர்களால் விஷம் குடித்த விவசாயி.! வெளியான அதிர்ச்சி காரணம்.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில்  சங்ககிரி அடுத்த கொங்கணாபுரத்தைச் சேர்ந்த பூபதி என்கிற விவசாயி கடந்த 2005 -ம் ஆண்டு பால் பண்ணை வைப்பதற்காக தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து இந்தியன் வங்கியில் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். 

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல பால்பண்ணை அவ்வளவு லாபகரமாக இயங்காத காரணத்தால், தன்னுடைய கடனை திருப்பி செலுத்திட தீர்மானித்தார். உடனடியாக வங்கிக்கு சென்று எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது மூன்று பேர் கடன் பெற்றதில் பூபதியின் பங்கை திருப்பி செலுத்துவதற்காக வங்கிக்கு வந்துள்ளார். அவரிடம் பூபதியிடம் நண்பர்களது கடனையும் நீங்களே செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும், இதனால் பூபதி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனவே, விரக்தி அடைந்த பூபதி வங்கிக்கு வெளியே விஷம் குடித்து  தற்கொலை கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கின்றது. கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide in salem


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->