திடீரென கார் டயர் வெடித்து விபத்து! கல்லூரி மாணவி பலி! - Seithipunal
Seithipunal


சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென  கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதால் விபத்தில் சிக்கி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் டிராவிட். ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி மற்றும் சக்தி. இதில் விஷ்ணுவும் அஸ்வினியும் சென்னையில் உள்ள தனியார்  இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நான்கு பேரும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு உள்ளனர்.

வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன் பக்க டயர் திடீரென பிடித்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை அந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரிமேல் மோதியது. கார் முன் பகுதி முழுவதும் சேதமானது.

இந்த நிலையில் காரில் இருந்த இளம்பெண் உட்பட நான்கு பெரும் பலத்த காயம் அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden car tire explosion accident! College student killed


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->