கள்ள ஓட்டு புகாரால் பரபரப்பு...! கள்ள ஓட்டு புகாரால் திமுக- பாஜக இடையே கடும் மோதல்...!
stir over allegations fake votes fierce clash between DMK and BJP over allegations fake votes
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியுடன் உற்சாகமான தொடக்கத்தை கண்டது. மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் தங்களுக்கான வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு சென்று, நீண்ட வரிசைகளில் பொறுமையாக காத்திருந்து ஜனநாயகப் பொறுப்பை உறுதியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த சூழலில், சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 13-வது வாக்குச்சாவடியில் அரசியல் பரபரப்பு கிளம்பியது. அங்கு போட்டியிடும் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், பாஜக மற்றும் திமுக ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
அடையாள ஆவணங்கள் இன்றி கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன என தமிழிசை குற்றஞ்சாட்டியதுடன், அதற்கு திமுக முகவர்கள் தீவிர எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் சூழ்நிலை மேலும் தீவிரமடைந்து, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து சத்தமிட்டு விவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு நிலையும் உருவாகி பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
அதே நேரத்தில், வாக்குச்சாவடிக்குள் இருந்த சந்தேக நபர் குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில், துணை ராணுவத்தினர் தலையிட்டு அவரை வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சில நேரம் பதட்டம் மற்றும் பரபரப்பு நிலவியது என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
stir over allegations fake votes fierce clash between DMK and BJP over allegations fake votes