#Breaking || நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி என ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கல்குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் விஜய் மற்றும் முருகன் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கல்குவாரி விபத்தில் சிக்கி காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin announces Rs 1 lakh financial assistance for injured in Nellai quarry accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->