மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபர் பரிதாப பலி: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal



விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கோவில்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் நேற்று திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புக்குள்ளானது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீக்குளித்த நபரை மீது ஏரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து அவரை காப்பாற்றினர். 

உடல் முழுவதும் தீ காயம் எற்பட்ட சந்திரசேகர், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srivilliputhur district court complex person suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->