சிங்கள கடற்படையால் அரங்கேறும் கொடூரங்கள்.. முக்கிய கோரிக்கை வைத்துள்ள இராமதாஸ்.!
SriLankan Navy harass Rameswaram fishermen
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சார்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இதன்போது அங்கு வந்த சிங்கள கடற்படையினர், தமிழக மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடித்துள்ளனர். உயிருக்கு பயந்து செய்வதறியாது திகைத்த மீனவர்கள், கடலில் வலைகளை அப்படியே விட்டுவிட்டு கரைதிரும்பியுள்ளனர்.
இந்த விஷயம் தமிழகம் முழுவதும் மீண்டும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் ட்விட்டர் பதிவில், " வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினர் அத்துமீறல் சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் நிம்மதியாக மீன் பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
SriLankan Navy harass Rameswaram fishermen