ரூ 2 லட்சம் முதல் ரூ 25 லட்சம் வரை உதவித்தொகை - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டம் மூலம் பயன்பெற, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம் என்று, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ 2 லட்சம் முதல் ரூ 25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். 

ஏற்கனவே அஞ்சல் வழியில் / நேரடியாக விண்ணப்பிருந்தாலும், மீண்டும் இணையவழியில் விண்ணப்பங்களைத் விண்ணப்பிக்க தவிர பிற வேண்டும். இணைய விண்ணப்பங்கள் வழியில் எக்காரணம் வரும் கொண்டும் ஏற்கப்படமாட்டாது. 

மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

அறிவிப்பின் விவரங்களுக்கு கீழ் காணும் புகைப்படங்களை காணவும் ;


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sports TNPlayers TNGovt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->