திமுக அரசை கண்டித்தும் போதைப் பொருள்களுக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தி.மு.க.,வைச் சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தனது காரில், 600 கிலோ குட்கா கடத்தியது சிவகிரி செக்போஸ்ட்டில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. இந்தநிலையில், போதை பொருளுக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது :-

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் கடத்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படுவது இது முதன்முறை அல்ல.

வேலுார் மாவட்டத்தில், ஒரே நாளில், 2,500 லிட்டர் கள்ளச்சாராயம், ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. தொடர்ச்சியான கைதுகள், சட்ட விரோத போதை பொருள் விவகாரத்தில் தி.மு.க.,வினர் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனரோ… இதை முதல்வரும் கண்டும் காணாமல் இருக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

போதை கடத்தல் மட்டுமல்லாமல், கனிமவள சுரண்டல்களிலும், தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வருகிறது. எனவே, அரசை அழுத்தம் கொடுத்து செயல்பட வைக்க, மக்கள் போராட்டம் தவிர வேறு வழியில்லை. எனவே, மக்கள் பகிரங்கமாக போதை பொருட்களுக்கு எதிராக, செயலற்ற அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk government drugs Hindu munnani


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->