பொதுமக்களுக்கு இறுதி வாய்ப்பு.! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 9-ந்தேதி 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி சென்றவர்கள் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக, தமிழகம் முழுவதும் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம் மூலம் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயனடைந்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நாளையும், நாளை மறுதினம் என்று இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த சிறப்பு முகாம் பொதுமக்களுக்கு இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த முகாமில் பொதுமக்கள் படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம். அரசியல் கட்சியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் மையங்களுக்கு செல்லாமல் www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாக உள்ளது" என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special camp for vote list name add in chennai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->