எஸ்.பி.பி.,க்கு என்ன ஆனது.! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையானது கடந்த 14ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 

இதையடுத்து, அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து கொரோனா நோயிலிருந்து மீண்ட நிலையில் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் படுக்கையில் இருப்பதால் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தினமும் அவர் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்பிபி சரண்  செய்திகளை வெளியிட்டு கொண்டிருந்தார். 

அவருடைய உடல்நிலை குணமாகி விரைவில் வீடு திரும்புவார் என எதர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திடீரென பின்னடைவை சந்தித்து,  

நேற்று மாலை அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவே இந்த பின்னடைவுக்கு காரணம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வரும் எஸ்.பி.பி.,யில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, எஸ்.பி.பி யை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SPB HEALTH REPORT SEP 25 MORNING


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->