“ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான்…அதனால் தான் திமுக கூட்டணியில் சேர்ந்தேன்” – கமல்ஹாசன் யாரை சொல்கிறார் என்பது புரிகிறதா?
Someone else threw the remote and ran away that why I joined the DMK alliance do you understand who Kamal Haasan is talking about
தஞ்சாவூரில் நடந்த பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு தோற்றப் பட திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், தமது அரசியல் முடிவுகளைப் பற்றி திறம்பட பேசியுள்ளார். “எதற்காக மீண்டும் திமுக கூட்டணியில் சேர்ந்தீர்கள்?” என உயர்ந்து வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் கூறிய விளக்கம் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல் கூறியதாவது:“நான் ரிமோட்டை தூக்கிப்போட்டேன்… ஆனால் வேறு ஒருவன் அதை தூக்கிட்டு ஓடிட்டான். அங்குதான் போகக் கூடாது. நம்முடைய ரிமோட் நம்முடைய மாநிலத்திலேயே இருக்க வேண்டும்.”இந்த ஒரு வாக்கியம் பேசப்பட்டவுடனே நிகழ்ச்சியில் இருந்தவர்கள் யாரை நோக்கி அவர் இது கூறுகிறார் என்பதைப் புரிந்து கொண்டது போல கத்தி உற்சாகம் காட்டினர்.
அவர் தொடர்ந்து:“விமர்சிக்கிறது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால் நாடு என்றால் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். கல்வி நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மாநிலத்தின் அதிகாரம் மாநிலத்திலேயே இருக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. ரிமோட்டை வேறொருவன் எடுத்து ஓடும்போது, அதை திரும்பிக் கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம்,” என்றார் கமல்.
அவரது இந்த உரை, தேசிய அரசியலை நோக்கி சுட்டிக்காட்டும் கூர்மையான விமர்சனமாகக் கருதப்படுகிறது. “ரிமோட்டை எடுத்து ஓடிவிட்டவர் யார்?” என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
கமலின் கூற்றில், மாநில அதிகாரங்களையும் கட்டுப்பாடுகளையும் மத்திய ஆட்சிக்கு ஒப்படைக்கக்கூடாதது என்ற தெளிவான அரசியல் சிக்னலும் இருந்தது.“புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள்… இல்லை என்றால் சும்மா இருங்கள்,” என்ற அவரது கடைசி வரிகள் கூட நிகழ்ச்சியில் மிகப்பெரிய கைதட்டலை பெற்றன.கமல் இந்த “ரிமோட்” உவமையில் யாரை குறித்தார் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?
English Summary
Someone else threw the remote and ran away that why I joined the DMK alliance do you understand who Kamal Haasan is talking about