தவெக ஆதவ் அர்ஜுனாக்கு ஸ்கெட்ச்! ஆழ்வார்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம்! உயிருக்கு ஆபத்து என போலீசில் புகார்! நடந்தது என்ன?
Sketch for Thaveka Adhav Arjuna The incident of the bakheet in Alwarpet A complaint has been filed with the police stating that there is a danger to life
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமது உயிருக்கு ஆபத்து எனக் கூறி சென்னை திநகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆயுதங்களுடன் அலுவலகம் நோக்கி மர்ம நபர்கள்?
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு அருகே, கடந்த ஜூலை 10ஆம் தேதி, கையில் ஆயுதங்களுடன் சில மர்மநபர்கள் வந்ததாகவும், அவர்கள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காட்டியதாகவும் ஆதவ் அர்ஜுனா தனது புகாரில் தெரிவித்துள்ளார்."அவர்கள் என்னை நோட்டமிட்டு, அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அதே நாளில், ஒரு அரசியல் கட்சியின் கொடி கட்டப்பட்ட காரிலும் மற்றொரு குழுவினர் வந்து என்னை தொடர்ந்து கவனித்தனர்," என ஆதவ் விளக்கியுள்ளார்.
உயிருக்கு நேரும் ஆபத்து குறித்து பாதுகாப்பு கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக, ஆதவ் தமது வழக்கறிஞர் மூலம் சென்னை திநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தம்மை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மர்ம நபர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போலீசார் நடவடிக்கையில்
புகார் கிடைத்ததையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆட்டோ விவரங்களை சேகரித்து துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக நிர்வாகத்தில் அதிர்ச்சி
இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலை ஏற்பட்டுள்ளது. ஒரு முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர் இவ்வாறு உயிர் அச்சத்தில் இருப்பது கட்சிக்குள் பாதுகாப்பு நிலையை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.
English Summary
Sketch for Thaveka Adhav Arjuna The incident of the bakheet in Alwarpet A complaint has been filed with the police stating that there is a danger to life