#JustIN: நிலப்பிரச்சனையில் இருதரப்பு மோதல்.. 9 பேருக்கு அரிவாள் வெட்டு.! - Seithipunal
Seithipunal


இடத்தகராறில் நடைபெற்ற ​இருதரப்பு மோதலில் 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கிராமம் கீழகாவனவயல். இந்த கிராமத்தை சார்ந்த 2 குடும்பத்தினருக்கு நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், இன்று வழக்கம்போல இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் ஒருதரப்பு மற்றொரு தரப்பை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து, எதிர்தரப்பு ஆயுத தாக்குதலில் ஈடுபட, இருதரப்பு மோதல் பயங்கரமாக நடந்துள்ளது. 

இந்த இருதரப்பு மோதல் சம்பவத்தில் 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தேவகோட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்ததை தொடர்ந்து இருதரப்பை சார்ந்த சிலர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

அரிவாள் வெட்டு விழுந்த 9 பேரும் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிக்கிக்கொண்டதால், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பிடமும் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இடத்தகராறில் சண்டை நடந்தது தெரியவந்துள்ளது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivaganga Devakottai 2 Gang Fight 9 Injured Police Investigation


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->