எஃப்.ஐ.ஆர் நகல் கொடுக்க ஒரு லட்சம் லஞ்சமா!!! - எஸ்.ஐ சஸ்பெண்ட் - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாவட்டம் , சேதராப்பட்டடுத்த  கடப்பேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். அவருடன் குயிலாப்பாளையம் குணசேகரன் மற்றும் செந்தில் மூவரும் நண்பர்கள். கடந்த மாதம் 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் பத்துக்கண்ணு பகுதியில் இருந்து சரண்ராஜின் பல்சர் பைக்கில் சேதராப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது துத்திப்பட்டு கிராமத்திலுள்ள ஜே.பி.ஏ., இரும்பு கம்பனி வளைவு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருத்த டாரஸ் லாரி மீது பைக் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சில வாரங்களுக்கு முன், இந்த விபத்தில் உயிரிழந்த கடப்பேரிக்குப்பம் சரண்ராஜின் சகோதாரர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் எப்.ஐ.ஆர் நகல் கேட்டார்.

அதற்கு சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ரூ.1,00,000 லஞ்சம் கேட்டுள்ளார்.  நடப்பதை சுதாரித்துக்கொண்டு சரண்ராஜின் சகோதாரர் முத்து இதனை மொபைல் போனில் வீடியோ பதிவு செய்தார்.

இதனையடுத்து புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் முத்து புகார் தெரிவித்தார்.அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரை டி.ஜி.பி ஷாலினி சிங்,ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தொடர் விசாரணைக்கு பிறகு நேற்று சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SI asking bribe one lakh rupees give copy FIR suspended


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->