நாட்டு படகில் கடத்திவரப்பட்ட தங்கம் - குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாபாகவே இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக படகுகள் மூலம் தங்கம், போதை மருந்துகள் உள்ளிட்டவை கடத்தப்படுவது, அவை போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் இலங்கையிலிருந்து நாட்டு படகுகள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி சுங்கத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், தங்கத்தை கடத்தி வந்தவர்கள் சுங்கத்துறையினரை தள்ளிவிட்டு தப்பித்து ஓடி உள்ளனர். அவர்களிடம் இருந்து கடத்திவரப்பட்ட ஏழு கிலோ தங்கத்தை மட்டும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்தது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven kg gold seized in ramesharam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->