போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் சேகர்பாபு! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை என்று, பாஜகவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தாவது, "போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் இங்கே கலவரத்தை ஏற்படுத்த நினைகிறார்கள், ஆனால் பெரியார் மண்ணில் அது ஒருகாலமும் நடக்காது. 

திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். வட மாநில​த்தைப் போல கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள், அது தமிழகத்தில் நடக்காது.

தமிழகம் திராவிட மண்... இதுபோன்ற கலவர முயற்சியை அனுமதிக்காது" என்று அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sekarbabu Minister Thiruparangundram Mountain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->