BREAKING: திருப்பரங்குன்றத்தில் பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு; ஆர்ப்பாட்டக்காரர்கள்-போலீசார் இடையே தள்ளு முள்ளு; சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கும் அனுமதி மறுப்பு..!
Section 144 imposed due to tension in Thiruparankundram
திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில், ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஓம் பலகை அருகே தீபம் ஏற்றப்பட்டது.
100 ஆண்டுக்கால மரபுப்படி வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மலை மீது ஏற தடுப்புகளை உடைத்து இந்து முன்னணியினர் செல்ல முயன்ற போது தள்ளுமுள்ளு, ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றநிலையில், அவர்களை தடுத்த போலீசார் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில் 02 காவலர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் தொடங்கி மலை உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து அத்துமீறி திருப்பரங்குன்றம் மலை மீது ஏறியவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அமைப்பினர் ஏற முயன்ற நிலையில் ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கும், மதுரை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், உத்தரவு வரும் வரை அனுமதிக்க வழங்க முடியாது என்றும் கூறியுள்ளது. அங்கு நிலவும் பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சி.ஐ.எஸ்.எஃப்.க்கு அனுமதி மறுத்துள்ளது.
English Summary
Section 144 imposed due to tension in Thiruparankundram