கல்லூரி வளாகத்தில் பள்ளி ஆசிரியர் தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.!
School teacher suicide in college campus in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி வளாகத்தில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகர் பகுதியில் சேர்ந்தவர் சுடலைமுத்து (30). இவர் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சுடலைமுத்து, இன்று காலை வீட்டின் அருகே உள்ள கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் கயிற்றால் தூக்குபோட்டுக் கொண்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதைப் பார்த்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய சுடலைமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுடலைமுத்து, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
School teacher suicide in college campus in tirunelveli