அரையாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு.!
school re open after half yearly exam finished
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் 13-ந்தேதி தொடங்கப்பட்டது.
ஆனால், கடந்த 18-ந்தேதி தென்மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாமல் போனது.
இதற்கிடையில், அரையாண்டு விடுமுறையும் நெருங்கியதால், தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், இந்த அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
வரலாறு காணாத வெள்ளம் பாதித்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விடுப்பட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது.
English Summary
school re open after half yearly exam finished