பட்டியலின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் - திருப்பூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிபவர் இளமதி ஈஸ்வரி. இவர் பட்டியலினத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த செயலுக்கு பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சித்ராவும் உடந்தையாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்தப் புகாரின் படி, தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டியலின மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்ய கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school head master suspend for say clean bathroom to sheduled students in tirupur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->