மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்ற தந்தை.. கழுத்தை இறுக்கிய மகனால் அரங்கேறிய கொடூரம்.!
Salem Son and Father Died in well
சேலம் மாவட்டத்தில் இருக்கும் பாம்பாடி என்னும் கிராமத்தில் ராஜா என்பவர் வெல்டிங் வேலை பார்த்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் பிரவீஷ் பிரஷிதா என்ற குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில், பிரவீஷ் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் சிறுவன் பிரவீஷுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க ராஜா அங்கிருக்கும் விவசாயக் கிணற்றுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது, சிறுவன் நீச்சல் அடித்து கொண்டிருந்தான். ராஜாவின் கழுத்தை அந்த சிறுவன் இருக்க பற்றி இருந்ததால் அவரால் நீச்சல் அடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக சற்று நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர். இதை பார்த்த மனைவியும், மகளும் கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் தேடினார்கள். தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட அவர்களும் வந்து தேடியதில் இருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
இருவரது உடலும் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Salem Son and Father Died in well