சேலத்தில் பரபரப்பு காரியத்தில் இறங்கிய பெண்.! காதலித்து கல்யாணம் செய்து.. ஏமாற்றிய கணவன்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு உடையார்பாளையம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளைஞரை கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். 

இதற்கு இருதரப்பு பெற்றோரும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, கடந்த 2021 இல் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சேலம் திருவாகவுண்டனூர் பகுதியில் இருக்கும் சாய்பாபா கோயிலில் கோகுல்ராஜ் மற்றும் சுகன்யா இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், சுகன்யாவை விட்டு கோகுல்ராஜ் பிரிந்து சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து பிரிந்து சென்ற காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு சுகன்யா கோகுல்ராஜின் வீட்டிற்கு முன் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுல்ராஜ் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். 

ஆனாலும் சுகன்யா அந்த வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் செய்து கொண்டே இருந்தார். இது குறித்து, போலீசார் விஷயம் அறிந்து வந்து இரு தரப்பினரையும் அழைத்து வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

salem men cheated women and then women protest in his house


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->