அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே சேலத்தில் கடும் வெயில்: மக்கள் அவதி, விவசாயம் பாதிப்பு! - Seithipunal
Seithipunal


அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பே சேலம் மாவட்டம் முழுவதும் கடும் கோடை வெப்பம் நிலவுகிறது. கடந்த சில வாரங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.

தீவிரமான வெப்பத்தால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனுடன் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால், விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், வெளியில் செல்லும் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதன் காரணமாக சேலம் நகரின் முக்கிய சாலைகள்—ஓமலூர் மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு, சாரதா கல்லூரி சாலை, 4 ரோடு, 5 ரோடு, புதிய பேருந்து நிலையம்—போன்ற இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து, சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

வேலைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள், குறிப்பாக முதியோர் மற்றும் பெண்கள் அதிக அவதிக்குள்ளாகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் மோர், கம்மங்கூழ், தர்பூசணி, இளநீர், எலுமிச்சை மற்றும் பல்வேறு பழச்சாறுகளை அதிகமாக அருந்தி வருகின்றனர். இதனால் பழக்கடைகள் மற்றும் ஜூஸ் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

சேலத்தில் சமீப நாட்களில் 102.7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி, அடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

salem heat wave


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->