ஆபாச பேச்சு மற்றும் ஆபாச நடனம்.. ஆண் நண்பருடன் கைதான ரவுடி பேபி சூர்யா.!! - Seithipunal
Seithipunal


டிக் டாக்கில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் மற்றும் ஆபாச பேச்சு மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. தற்போது யூ-டியூப் மூலமாக வீடியோ போடுவது, ஆபாசமாக பேசுவது, கொச்சையான வார்த்தைகளை பேசி சண்டையிடுவது என சமூக வலைத்தளங்களில் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார். 

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூ-டியூப் சேனல் நடித்து வருகிறார். அவரது சேனலில் வரும் நிகழ்ச்சியை குறித்து ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூடியூபில் விமர்சித்துள்ளனர். 

இது தொடர்பாக அந்தப் பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் சூப்பிரண்டு  செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மதுரை அருகே பதுங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rowdy baby surya arrested


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->