போலீசார் வேடம்; ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்குப் பதிவு! - Seithipunal
Seithipunal


ஓடும் ரயிலில் ரயில்வே போலீசார் என்று கூறி மாற்றுத்திறனாளியை குடி போதையில் 3 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓடும் ரயிலில் மாற்றுத் திறனாளி பயணியை தாக்கிய தலைமைக் காவலர் பழனி என்பவர் மீது திருவாரூர் ரயில்வே போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்ற மாற்றுத்திறனாளி பயணம் செய்துள்ளார்.அப்போது நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் என்று கூறி ஏறிய 3 பேர் ரயில் பெட்டியின் கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் யாரும் கதவை திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திருவாரூரில் ரயில் நின்ற போது பயணி ஒருவர் இறங்குவதற்காக கதவை திறந்ததும் உள்ளே சென்ற 3 பேர் கருணாநிதியை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஓடும் ரயிலில் மாற்றுத் திறனாளி பயணியை தாக்கிய தலைமைக் காவலர் பழனி என்பவர் மீது திருவாரூர் ரயில்வே போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Role of Police Three booked for assaulting differently abled man on moving train


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->