ஆசிரியர் வீட்டில் கொள்ளை..!! கொள்ளையனை கைது செய்த காவல்துறை...!!
Robbery near Tiruvannamalai
ஆசிரியர் வீட்டில் திருட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அடி அண்ணாமலை கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர்(41). இவர் அந்த பகுதியில் ஆசிரியாரக பணியாற்றி வருகிறார். நகைகளை தனது வீட்டின் பீரோவில் வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அனைவரும் தூங்கியபின் வந்த மர்மநபர் அவரது வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். விடிந்து வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து சிம்புராஜ் என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 72 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Robbery near Tiruvannamalai