சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !
road accident awareness 7
1. கவனக்குறைவு :
பெரும்பாலான விபத்துக்களுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவு மிக முக்கிய காரணம். செல்போன் பேசுவது, சாப்பிடுவது, மியூசிக் சிஸ்டத்தை இயக்குவது போன்ற பல்வேறு காரணங்களால் கவனக்குறைவு ஏற்படுகிறது. கவனக்குறைவு, வாழ்க்கையின் கனவுகளை குலைக்கின்றது.
2. அதீத வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது :
வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வேகத்தில் வாகனத்தை செலுத்த தவறுவதும் முக்கிய காரணமாகும். சில சாலைகளில் வேக வரம்பை மீறிச் செல்வதும் விபத்துக்கு வழிவகுக்கிறது. எனவே மித வேகம், மிக நன்று.
3. குடிபோதை :
குடிபோதையில் நிதானமின்றி வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. குடிபோதையில் இருக்கும்போது வாகனங்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குடியானது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கக்கூடியது.
4. சாலையில் தாறுமாறாக செல்லுதல் :
பிறருக்கு அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை கண்ணை மூடிக்கொண்டு தாறுமாறாக செல்லுதல், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகப்பெரிய விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகின்றது.
5. மழை நேரம் :
மழை நேரத்தில் வாகனத்தை இயக்குவதில் பல ஆபத்துக்கள் உள்ளன. சாலைகளின் வழுக்குத்தன்மை, போதிய பார்வைத்திறன் கிடைக்காதது, மழை நீர் தேங்கிய சாலைகளில் இருக்கும் பள்ளம், மேடுகளை கணிக்க முடியாமல் வாகனங்களை இயக்குவதால் நிச்சயம் விபத்தானது ஏற்படுகின்றது.
6. சிக்னல் விளக்குகள் :
சிக்னலில் போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு ஒளிரும்போது விதியை மீறி வாகனத்தை செலுத்துவதும் விபத்துக்கான காரணமாக அமைகின்றது.
7. பனிபடர்ந்த சாலை :
பனிபடர்ந்த சாலைகளில் காரை செலுத்துவதும், கடினமான விஷயம். டயர்களுக்கு போதிய பிடிப்பு கிடைக்காமல், வழுக்கிச் சென்று விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம். பனிபடர்ந்த சாலைகளில் செல்லும்போது, அதற்கான விசேஷ டயர்களை பொருத்திக்கொள்வது உகந்தது.
8. அனுபவமின்மை :
புதிதாக வாகனங்களை இயக்க பழகுபவர்களும், இளைஞர்களும் அனுபவமின்மை காரணமாக சூழ்நிலைகளை கையாளத் தெரியாமல் விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.
English Summary
road accident awareness 7